Pages

Thursday, 18 October 2012

Tamilan

இயற்கை நமக்குத் தந்துள்ள பரிசு இளநீர்

இளநீர் இயற்கை நமக்குத் தந்துள்ள புத்துணர்ச்சி தரும் இனிய பானம் தென்னை தரும் இளநீர் மிகவும் சுவையானது சத்தானது கோடையின் கொடுமையைத் தணி க்க வெப்ப மண்டல மக்களுக்கு இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம்.

தாகத்தைத் தணிக்கும் பானம் மட்டு மல்ல தாதுபொருட்கள் அடங்கிய பல நோய்களைத் தீர்க்கும் தன்மை யும் கொண்டது.

மனித உடலில் அதிக அளவு நீர்ச்ச த்து விரயமானால் அவற்றைச் சரி செய்ய எளிதில் குறைந்த செலவில் கிடைப்பது இளநீர் மட்டுமே. இள நீரில் உள்ள புரதச்சத்து பசும்பாலில் உள்ளதைவிட அதிகமாகும்.

இளநீரின் பயன்கள்.

இளநீர் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.

இளநீர் முதியோர்களுக்கும். நோயாளிக்கும் சிறந்த ஊட்டச் சத்து பானமாகும்.

இளநீரை உடலில் பூசிக்கொண்டால் தட் டம்மை, சின்னம்மை., பெரியம்மை, ஆகி யவைகளால் ஏற்படும் உடல் அரிப்பைத் தடுக்கலாம்.

இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களை அகற்ற உதவு கிறது.

உடலில் ஏற்படும் நீர் இழப்பை சரி செய் வதற்கு இளநீரை பருகுவது நல்லது.

இளநீரில் உள்ள உப்புத்தன்மை மற்றும் வழவழப்புத் தன்மை கார ணமாக காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு பானமாக விளங்குகிறது.

மனித குலத்திற்கு இயற்கை தந்துள்ள சத்தான இன்சுவை பானம் இளநீர் மட்டும்தான். மற்ற பானங்களுடன் ஒப்பிடுகையில் இளநீர் மட்டுமே அதிகமான பயன்களைத் தருகிறது.

இளநீர் மிகக் குறைந்த செலவில் அதிகப் பயன்களைத் தரவல்லது. எனவே தாகத்தைத் தணிக்க உடல்நலம் காக்க தினமும் ஒரு இளநீர் குடிப்போம் என்றும் நலமாய் இருப் போம்.

No comments:

Post a Comment